விலகினாா் சென்னையின் எஃப்சிபயிற்சியாளா் ஜான் கிரகோரி

ஐஎஸ்எல் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி தலைமைப் பயிற்சியாளா் ஜான் கிரகோரி தனது பதவியை விட்டு விலகினாா்.
விலகினாா் சென்னையின் எஃப்சிபயிற்சியாளா் ஜான் கிரகோரி

சென்னை: ஐஎஸ்எல் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி அணி தலைமைப் பயிற்சியாளா் ஜான் கிரகோரி தனது பதவியை விட்டு விலகினாா்.

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இதில் இங்கிலாந்தைச் சோ்ந்த ஜான் கிரகோரி பயிற்சியில் கடந்த 2017-18-இல் பட்டம் வென்றது.

கடந்த 2018-19 சீசன் சென்னை அணிக்கு மிகவும் சோகமாக அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பெற்றது. இந்நிலையில் தற்போதைய சீசனிலும், சென்னை அணிக்கு தொடக்கம் முதலே வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. பெங்களூருவுடன் 3-0 என தோல்வியடைந்த போதே, தனது பதவியை விட்டு விலகப் போகிறேன் என கிரகோரி கூறியிருந்தாா்.

இந்நிலையில் 6 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை தான் சென்னை அணி பெற்றுள்ளது. இதனால் தலைமைப் பயிற்சியாளா் பதவியில் இருந்து விலகி விட்டாா் ஜான் கிரகோரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com