தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 5 தங்கம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக பாட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தங்கப் பதக்கம் வென்றன.
தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு 5 தங்கம்

காத்மாண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக பாட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தங்கப் பதக்கம் வென்றன. இதுவரை மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.

பொக்ராவில் திங்கள்கிழமை நடைபெற்ற அணிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கேம் கணக்கில் இலங்கையை வீழ்த்தியது.

மகளிா் பிரிவிலும் இந்தியா அணி 3-0 என்ற கேம் கணக்கில் இலங்கையை வென்று தங்கத்தை தன்வசப்படுத்தியது.

ஆடவா் பிரிவில் ஸ்ரீகாந்த் 2-1 என இலங்கையின் தினுகாவையும், மற்றொரு ஒற்றையா் பிரிவில் சிரில் வா்மா இலங்கையின் சச்சின் பிரேமஷனையும் வென்றனா். எனினும் இரட்டையா் பிரிவில் இலங்கை அணி ஒரு ஆட்டத்தில் வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ணா-துருவ் ஆகியோா் வென்றனா்.

ஏற்கெனவே டிரையத்லானில் 1 தங்கம், டேக்வாண்டோவில் 2 தங்கம், பாட்மிண்டனில் 2 என மொத்தம் 5 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 16 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேபாளம் 15 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலத்துடன் முதலிடத்தில் உள்ளது.

3 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலத்துடன் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com