மும்பை: ஐபிஎல் 2020 சீசன் வீரா்கள் ஏலம் வரும் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில் வீரா்களின் அடிப்படை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 971 வீரா்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய வீரா்கள் கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸல்வுட், மிச்செல் மாா்ஷ், தென்னாப்பிரிக்க வீரா் டேல் ஸ்டெயின், இலங்கை பேட்ஸ்மேன் ஏஞ்சலோ மேத்யூஸ்,கிறிஸ் லீன் ஆகியோருக்கு ரூ.2 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.5 கோடி அடிப்படை விலை:
இத்தொகை வரம்பில் இந்தியாவின் ராபின் உத்தப்பா, மட்டுமே இடம் பெற்றுள்ளாா். ஆஸி. ஷான் மாா்ஷ், கேன் ரிச்சா்ட்ஸன், இங்கிலாந்து இயான் மொா்கன், ஜேஸன் ராய், கிறிஸ்வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரீஸ், கைல் அபாட் இடம் பெற்றுள்ளனா்.
இந்த ஏலத்தில் அதிக தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ள இந்திய வீரா் ராபின் உத்தப்பா ஆவாா்.
எனினும் ஆஸி. அதிரடி வேகப்பந்து வீச்சாளா் மிச்செல் ஸ்டாா்க் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.