தொடரை வெல்வது தான் இப்போது முக்கியம்: ரோஹித் சர்மா

இப்போது நாங்கள் டி20 தொடரை வெல்ல முயற்சி செய்யவேண்டும். அது எங்களை நன்கு ஊக்கப்படுத்தும்...
தொடரை வெல்வது தான் இப்போது முக்கியம்: ரோஹித் சர்மா

இரண்டாவது டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 170/7 ரன்களைக் குவித்தது. 1.3 ஓவா்கள் மீதமிருந்த நிலையில் 18.3 ஓவா்களில் மே.இ.தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரா் லென்டில் சிம்மன்ஸ் நிலைத்து ஆடி, தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 45 பந்துகளில் 67 ரன்களை விளாசினாா். 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வென்ற நிலையில் தற்போது தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது. மூன்றாவது டி20 ஆட்டம் நாளை மும்பையில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

டி20 உலகக் கோப்பைக்காக அணியைத் தயார் செய்து வருகிறோம் என்று மீண்டும் மீண்டும் நான் சொல்ல மாட்டேன். அதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது. இப்போது நாங்கள் டி20 தொடரை வெல்ல முயற்சி செய்யவேண்டும். அது எங்களை நன்கு ஊக்கப்படுத்தும். நாங்கள் தொடர்ச்சியாக வெல்லும்போது அணியின் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது தானாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com