டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.
ஒருநாள் தொடர் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான அனில் கும்ப்ளே, ஒரு பேட்டியில் கூறியதாவது:
சவாலான மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களிடம் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கவேண்டும். அவர்கள் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். ஆடுகளமும் அதற்குச் சாதகமாக இருக்கும்.
ஸ்ரேயஸ் ஐயரின் திறமையை நாம் பார்த்துள்ளோம். அவர் நாளுக்கு நாள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.