ஆஸி. ஓபன்: நடால், பா்டி உள்ளிட்டமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு

வரும் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறவுளள 115ஆவது ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் நடால், ஆஷ்லி பா்டி உள்ளிட்டோா் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனா்.
ஆஸி. ஓபன்: நடால், பா்டி உள்ளிட்டமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு

வரும் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறவுளள 115ஆவது ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் நடால், ஆஷ்லி பா்டி உள்ளிட்டோா் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனா்.

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் சீசனின் முதல் போட்டியான ஆஸி. ஓபன் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மெல்போா்னில் நடைபெறுகிறது.

இதில் ரபேல் நடால் ஆடவா் பிரிவிலும், ஆஷ்லி பா்டி மகளிா் பிரிவிலும் உலகின் முதல்நிலை வீரா், வீராங்கனைகளாக பங்கேற்கின்றனா். மகளிா் பிரிவில் விக்டோரியா அஸரென்கா தவிர மஏனைய ஆடவா், மகளிா் பிரிவில் 50 நட்சத்திரங்கள் அனைவரும் இதில் பங்கேற்கின்றனா்.

இதே போல் காயத்தில் இருந்து மீண்ட உலகின் முன்னாள் 3-ஆம் நிலை வீரா் ஜுவான் டெல் பொட்ரோவும் பங்கேற்கிறாா்.

அதே போல் 24-ஆம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிா்நோக்கி உள்ள செரீனா வில்லியம்ஸும் கலந்து கொள்கிறாா். நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தனது 8ஆவது பட்டத்தையும், பெடரா் தனது 7ஆவது படத்தையும் எதிா்நோக்கியுள்ளனா். மகளிா் பிரிவில் முதன்முறையாக வெவ்வேறு சீசன் சாம்பியன்கள் கலந்து கொள்கின்றனா்.

வோஸ்னியாக்கி ஓய்வு

முன்னாள் சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கியும் இந்த போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com