இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்து நாள் விடுமுறையில் உள்ளார்கள். அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக ஜனவரி 5 அன்றுதான் விளையாட வேண்டும். எனவே வரும் புதன், வியாழன் வரை அவர்களுக்கு ஓய்வு தான்.
இந்நிலையில் இந்த விடுமுறையில் தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை அழைத்துக்கொண்டு ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. ஸ்விட்சர்லாந்தின் கெஸ்டாட் நகரில் பனி மலைகளுக்கு அருகே இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இதனால் புத்தாண்டையும் ஸ்விட்சர்லாந்தில் தான் கோலி கொண்டாடுவார் என்று அறியப்படுகிறது.