ஐபிஎல் 2020 போட்டி, மார்ச் 29 அன்று தொடங்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகி ஒருவர் இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
ஐபிஎல் 2020 போட்டி, மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதனால் ஆரம்பத்தில் வெளிநாட்டு வீரர்கள் சிலரால் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து டி20 போட்டி மார்ச் 29-ல் முடிவடைகிறது. இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் மார்ச் 31 அன்று முடிவடைகிறது. இதனால் ஏப்ரல் 1 அன்று ஐபிஎல் தொடங்கினால் எல்லா வீரர்களும் கலந்துகொள்ள முடியும். ஐபிஎல் நிர்வாகக் குழு என்ன முடிவெடுக்கிறது என்பது இனிமேல் தான் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.