மே.இ,தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 448 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
செயின்ட் லூசியாவில் நடைபெற்று வரும் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 277, மே.இ.தீவுகள் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டாகின.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை எடுத்துள்ளது.
கேப்டன் ஜோரூட் அபாரமாக ஆடி 111 ரன்களையும், ஜோ டென்லி 69, ஜோஸ் பட்லர் 56 ரன்களையும் விளாசினர். கெமர் ரோச், கேப்ரியல், கீமோ பால், ஜோசப் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 448 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.