ஐ-லீக்: ஸ்ரீநகரில் இருந்து ஆட்டத்தை வேறிடத்துக்கு மாற்ற மினர்வா கோரிக்கை

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக ரியல் காஷ்மீர் அணிக்கு எதிராக ஸ்ரீநகரில் நடக்கவுள்ள ஐ--லீக் ஆட்டத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என மினர்வா பஞ்சாப் அணி அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு கோரிக்கை


புல்வாமா தாக்குதல் எதிரொலியாக ரியல் காஷ்மீர் அணிக்கு எதிராக ஸ்ரீநகரில் நடக்கவுள்ள ஐ--லீக் ஆட்டத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என மினர்வா பஞ்சாப் அணி அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐலீக் பட்டியலில் ரியல் காஷ்மீர் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கும் நடப்பு சாம்பியன் மினர்வா பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஆட்டம் வரும் 18-ஆம் தேதி ஸ்ரீநகரில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் அதை மாற்ற வேண்டும் என ஏஐஎப்எப்புக்கு மினர்வா கோரிக்கை விடுத்துள்ளது. ஆட்டத்தை மாற்றாவிட்டால், பங்கேற்கப் போவதில்லை. 3 புள்ளிகள் எங்களுக்கு முக்கியமில்லை இந்திய வீரரகளுக்கு தலைவணங்குகிறோம் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com