புல்வாமா தாக்குதல்: விராட்கோலி, உள்ளிட்ட வீரர்கள் கண்டனம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் கோலி தனது சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ளதாவது-
இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமுற்ற வீரர்கள் அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சேவக்: சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. காயமுற்றோர் துரிதமாக குணமடைய வேண்டும்.
லக்ஷ்மண்: தாக்குதல் சம்பவம் மிகுந்த வேதனையும், கொதிப்பையும் தருகிறது. வீர மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ரோஹித் சர்மா: காதலர் தினத்தை அனைவரும் கொண்டாடிய வேளையில் கோழைத்தனமான தாக்குதலால் நமது வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதை விவரிக்க இயலாது. 
இதே போல் ஷிகர் தவன், முகமது கைஃப் ஆகியோரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com