காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் கோலி தனது சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ளதாவது-
இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமுற்ற வீரர்கள் அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சேவக்: சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. காயமுற்றோர் துரிதமாக குணமடைய வேண்டும்.
லக்ஷ்மண்: தாக்குதல் சம்பவம் மிகுந்த வேதனையும், கொதிப்பையும் தருகிறது. வீர மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ரோஹித் சர்மா: காதலர் தினத்தை அனைவரும் கொண்டாடிய வேளையில் கோழைத்தனமான தாக்குதலால் நமது வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதை விவரிக்க இயலாது.
இதே போல் ஷிகர் தவன், முகமது கைஃப் ஆகியோரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.