இங்கிலாந்தின் எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி தகுதி பெற்றுள்ளது.
லண்டனில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்-செல்ஸி அணிகள் மோதின. நட்சத்திர வீரர் பால் போக்பா கடத்தி அனுப்பிய பந்தை அற்புதமாக கோலாக்கினார் ஆன்டர் ஹெரரா.
பின்னர் சிறிது நேரம் கழித்து இரண்டாவது கோலை போக்பாவே அடித்தார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வென்றது. இதனால் நடப்பு சாம்பியனான செல்ஸி போட்டியில் இருந்து வெளியேறியது.