எஃப் ஏ கோப்பை: காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்

இங்கிலாந்தின் எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி தகுதி பெற்றுள்ளது.
வெற்றி மகிழ்ச்சியில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள்.


இங்கிலாந்தின் எஃப் ஏ கோப்பை கால்பந்து போட்டி காலிறுதிக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி தகுதி பெற்றுள்ளது.
லண்டனில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்-செல்ஸி அணிகள் மோதின. நட்சத்திர வீரர் பால் போக்பா கடத்தி அனுப்பிய பந்தை அற்புதமாக கோலாக்கினார் ஆன்டர் ஹெரரா.
பின்னர் சிறிது நேரம் கழித்து இரண்டாவது கோலை போக்பாவே அடித்தார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வென்றது. இதனால் நடப்பு சாம்பியனான செல்ஸி போட்டியில் இருந்து வெளியேறியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com