களிமண் தரை மைதானத்தில் மீண்டும் ஆட முடிவு செய்துள்ளார் உலகின் மூன்றாம் நிலை வீரரான ரோஜர் பெடரர்.
டென்னிஸ் ஆட்டங்கள் புல்தரை, களிமண் தரை மைதானங்களில் வழக்கமாக நடைபெற்று வருகின்றன. இதில் புல்தரை மைதான மன்னன் என்ற பெயரை பெற்றுள்ளார் பெடரர்.
பெரும்பாலான வெற்றிகள் அவருக்கு இம்மைதானத்திலேயே கிடைத்துள்ளன. அதே நேரத்தில் நடால் களிமண் தரையில் ஆடுவதில் வல்லவராகத் திகழ்கிறார்.
களிமண் தரை மைதானத்தில் ஆடுவதால் காயமுறுவதைத் தடுக்கவும், தனது உடல்தகுதியை பாதுகாக்க ஏதுவாக 2015 முதல் அம்மைதானங்களில் ஆடுவதை தவிர்த்து விட்டார் பெடரர். இந்நிலையில் விரைவில் நடக்கவுள்ள மாட்ரிட் ஓபன் போட்டியில் களிமண் மைதானத்தில் ஆட தீர்மானித்துள்ளார் பெடரர்.