பாக். வீரர்களுக்கு விசா தருவதில் சிக்கல் உள்ளதால், பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதல் எதிரொலியாக ஏற்கெனவே உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாக். வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதால் பெரும் பிரச்னை எழுந்தது. ஒலிம்பிக் தகுதி இடங்கள் குறைக்கப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை இந்திய அரசு தர வேண்டும். அதுவரை சர்வதேச போட்டிகளை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதாக ஐஓசி அறிவித்தது.
இந்நிலையில் ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டி பெங்களூருவில் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாக். வீரர்கலுக்கு விசா கிடைக்கும் என போட்டி அமைப்பாளர்களால் உறுதி தரப்படவில்லை. இதனால் போட்டியை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக ஆசிய ஸ்னூக்கர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.