துளிகள்...

துளிகள்...

*  பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ள பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த மாதிரியை தருமாறு லாஸ்வேகாஸ் காவல்துறை கூறியுள்ளது. 

*  ஏஎஃப்சி கோப்பையில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடம் தோல்வியுற்றாலும், அடுத்து பஹ்ரைனுடன் நடக்கும் ஆட்டத்தில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா முன்னேறும் என தலைமைப் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் தெரிவித்துள்ளார்.

*  இந்தியாவைச் சேர்ந்த பார்முலா ஒன் கார் டிரைவர் நரேன்கார்த்திகேயன், ஒற்றை சீட் கார் பந்தயத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். 

*  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தான் மீண்டும் பேட்டை தொடமாட்டேன் என இந்திய கேப்டன் விராட் கோலி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

*  அய்ஸாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ-லீக் கால்பந்து ஆட்டம் ஒன்றில் ரியல் காஷ்மீர்-அய்ஸால் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

*  ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக யுஏஇ-இந்திய அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்ற போது, இந்திய ரசிகர்கள் பறவைக் கூண்டில் பூட்டப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com