டெஸ்ட் தொடர்: பாக்.கை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா

டெஸ்ட் தொடரில் 3-0 என கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.
வெற்றிக் கோப்பையுடன் தென்னாப்பிரிக்க அணியினர்.
வெற்றிக் கோப்பையுடன் தென்னாப்பிரிக்க அணியினர்.


டெஸ்ட் தொடரில் 3-0 என கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.
ஜோஹன்னஸ்பர்க்கில் இரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 262 ரன்களையும் (ஐய்டன் மார்க்ரம் 90), பாகிஸ்தான் 185 (சர்ப்ராஸ் அகமது 50), ஒலிவியர் 5-51)ரன்களையும் எடுத்தன. அதே போல் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 303 (குயிண்டன் டி காக் 129, ஹஸிம் ஆம்லா 81), (ஷதாப் கான் 3-41) எடுத்தது.
381 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாக். அணியால் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
வெறும் 273 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸாத் ஷபிக் மட்டுமே 65 ரன்களை குவித்தார். ஒலிவியர் 3-74 விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாக்.கை வென்று தொடரையும் 3-0 என கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.
ஒலிவியர் தொடர் நாயகனாகவும், டி காக் ஆட்ட நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com