இத்தாலி சூப்பர் கோப்பை: ஜுவென்டஸ் சாம்பியன்

இத்தாலி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ஏசி மிலனை வீழ்த்தி ஜுவென்டஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது
கோப்பையுடன் ஜுவென்டஸ் அணி வீரர்கள்.
கோப்பையுடன் ஜுவென்டஸ் அணி வீரர்கள்.


இத்தாலி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ஏசி மிலனை வீழ்த்தி ஜுவென்டஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 2018 ஜூலை மாதம் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி ஜூவென்டஸ் அணியில் இணைந்தார். அதன் பின் பல்வேறு போட்டிகளில் ஆடி வந்த நிலையில் பட்டம் எதையும் அந்த அணி வெல்லவில்லை. 
சாம்பியன்ஸ் லீக் கோப்பையைவெல்ல வேண்டும் என்ற அந்த அணி உள்ளது. இதற்கிடையே இத்தாலி சூப்பர் கோப்பை இறுதி ஆட்டம் ஜெத்தாவில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 
ஆட்டத்தில் 61-ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி அற்புதமான கோலை அடித்தார் ரொனால்டோ. பதி லுக்கு ஏசி மிலன் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. பின்னர் ஜுவென்டஸ் அணி பட்டத்தை வென்றது.
இது நான் ஜுவென்டஸ் அணியில் சேர்ந்து பெறும் முதல் பட்டம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ரொனால்டோ. இது அந்த அணி வெல்லும் 8-ஆவது கோப்பையாகும். ஜெத்தாவில் 15000 பெண்கள் உள்பட 62 ஆயிரம் பேர் இந்த போட்டியைக் கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com