என்னைப் போல பலருக்கும் நம்பிக்கையளிக்கும் வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரை விடவும் விராட் கோலி பெரிய வீரரா என்றொரு விவாதம் சமூகவலைத்தளங்களில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது:
விராட் கோலியை மதிக்கிறேன். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது. சச்சினைப் புதிய மற்றும் பழைய கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. என்னால் கிளப் கிரிக்கெட்டில் விளையாடமுடியும் என்றுகூட எண்ணியதில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் என்னைப் போல இன்னும் ஆயிரம் தலைமுறைகளுக்கு நம்பிக்கையளிக்கும் வீரராக இருப்பார் என்று கூறியுள்ளார்.