சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனை அரான்ஸாவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா.
புணேயில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த கேலோ இந்தியா யூத் போட்டிகளில் மகாராஷ்டிர அணி 85 தங்கம் உள்பட 228 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி 5-ஆவது இடத்தைப் பெற்றது. 21 வயது மகளிர் பிரிவில் தமிழக அணி 3-2 என்ற செட் கணக்கில் கேரளத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவர் பிரிவில் கேரளம் 4 செட் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி தங்கம் வென்றது.
தோனி இன்னும் உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டத்தை நிறைவு செய்பவராக திகழ்ந்து வருகிறார் என ஆஸி. ஜாம்பவான் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார்.