மும்பை மாரத்தான்: லகாட், அலெமு சாம்பியன்: இந்திய பிரிவில் சுதாசிங் முதலிடம்

டாட்டா மும்பை மாரத்தான் பந்தயத்தில் ஆடவர் பிரிவில் கென்யாவின் காஸ்மோஸ் லகாட்டும், மகளிர் பிரிவில் எதியோப்பியாவின் வொர்க்நேஷ் அலெமுவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

டாட்டா மும்பை மாரத்தான் பந்தயத்தில் ஆடவர் பிரிவில் கென்யாவின் காஸ்மோஸ் லகாட்டும், மகளிர் பிரிவில் எதியோப்பியாவின் வொர்க்நேஷ் அலெமுவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
பந்தய தூரமான 42.195 கி.மீ-ஐ கென்ய வீரர் லகாட் 2 மணி , 9 நிமிடங்கள், 15 விநாடிகளில் கடந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
எத்தியோப்பியாவின் அசீவ் பேண்டி, ஆல்நல் சுமேட் ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
மகளிர் பிரிவில் வொர்க்நேஷ் அலெமு சாம்பியன் பட்டம் வென்றார். மற்றொரு எத்தியோப்பிய வீராங்கனைகள் அமேன் கோபேனா, பிர்கே டெபிள் ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
இந்தியர்களுக்கான போட்டி மகளிர் பிரிவில் ஆசிய தங்கமங்கையான சுதா சிங் முதலிடம் பெற்றார். 2 மணி, 34 நிமிடங்கள், 56 வினாடிகளில் பந்தயதூரததை கடந்து தனிப்பட்ட சாதனையை படைத்தார். முந்தைய தேசிய சாதனையையும் சுதாசிங் தகர்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com