இந்திய தொடக்க பேட்ஸ்மேன்களை கவனமாக கையாள வேண்டும்: ராஸ் டெய்லர்

ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் கேப்டன் கோலி தவிர, முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நியூஸிலாந்து மூத்த வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
இந்திய தொடக்க பேட்ஸ்மேன்களை கவனமாக கையாள வேண்டும்: ராஸ் டெய்லர்


ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் கேப்டன் கோலி தவிர, முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நியூஸிலாந்து மூத்த வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராஸ் டெய்லர் திங்கள்கிழமை எதிர்வரும் தொடர்கள் குறித்து கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரின் போது, கேப்டன் கோலியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அவர்கள் அதிகம் சிந்தித்தனர். ஆனால் புஜாரா அபாரமாக ஆடி வெற்றியை தன் அணியின் பக்கம் திருப்பினார். இதே போல் நியூஸிலாந்தும் அந்த முறையை பின்பற்றக்கூடாது.
கோலி சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேனாக உள்ளார். அதே நேரத்தில் அவருக்கு முன்பு 2 சிறந்த தொடக்க வரிசை (ஓபனிங்) பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவன், ரோஹித் சர்மா உள்ளனர். நாம்அவர்களையும் கவனமாக கையாள வேண்டும். கடந்த சீசனில் சில போட்டிகளில் பங்கேற்றேன். அணியில் எனது பங்கு என்ன என்பது தெரியும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வித்தியாசமான ஷாட்களை அடித்து ரன்களை குவிப்பேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com