இங்கிலாந்துடன் இறுதிச் சுற்றில் மோதினால் கடவுள் நம்முடன் இருப்பார் என நம்புகிறேன்: ரவிசாஸ்திரி

உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் இறுதிச் சுற்றில் மோதினால் கடவுள் நம் பக்கம் இருப்பார் என நம்புகிறேன் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி
இங்கிலாந்துடன் இறுதிச் சுற்றில் மோதினால் கடவுள் நம்முடன் இருப்பார் என நம்புகிறேன்: ரவிசாஸ்திரி


உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் இறுதிச் சுற்றில் மோதினால் கடவுள் நம் பக்கம் இருப்பார் என நம்புகிறேன் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஐசிசி இணையதளத்தில் ரவிசாஸ்திரி கூறியுள்ளதாவது: 
ரவுண்ட் ராபின் பிரிவில் கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதி வென்றது இங்கிலாந்து. அப்போது கடவுள் இங்கிலாந்து வீரர்களின் தங்கும் அறையில் உடனிருந்தார் என நினைக்கிறேன். அதே போல் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து நாம் மோதினால்,கடவுள் நமது வீரர்களின் தங்கும் அறையில் உடன் இருப்பார் என நம்புகிறேன்.
ரோஹித் சர்மா ஒருநாள் ஆட்டங்களில் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். 3 இரட்டை சதங்களையும் அவர் தன் வசம் வைத்துள்ளார். இந்திய தொடக்க வரிசையில் நிலையாக ஆடி பெரிதும் உதவுகிறார். அடுத்தடுத்த 3 சதங்களுடன் அவர் அரையிறுதிக்கு இந்தியாவை முன்னேறச் செய்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க ஆட்டத்தில் ரோஹித் அடித்த சதம் மிகவும் சிறந்தது. அந்த பிட்ச் மிகவும் கடினமானது. எனினும் அதில் சிறப்பாக ஆடினார் என்றார் சாஸ்திரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com