விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 23-ஆம் நிலையில் உள்ள ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் ஜோகோவிச் தனது காலிறுதியில் 6-4, 6-0, 6-2 என்ற செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை வீழ்த்தினார். பெதிஸ்டா அகுட் 7-5, 6-4, 3-6, 6-3 என்ற செட்கலில் ஆர்ஜெண்டீனாவின் குய்டோ பெல்லாவை வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் பார்பரா ஸ்டிரைக்கோவா 7-6(7/5), 6-1 என்ற செட்களில் பிரிட்டனின் ஜோஹன்னா கோண்டாவையும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7-5, 6-4 என்ற செட்களில் செக் குடியரசின் கரோலினா முசோவாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.