மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி 3-0 என வென்றுள்ளது.
மே.இ. தீவுகளின் நார்த் சவுண்டில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 100, ஷுப்மன் கில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் ஏ அணி 34.2 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் கிருனாள் பாண்டியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மணீஷ் பாண்டேவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
இதனால் இந்திய ஏ அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது. அடுத்த இரு ஒருநாள் ஆட்டங்கள் வரும் வெள்ளியன்றும் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன.