ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் வியாழக்கிழமை தங்கம் வென்றார்.
ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் 10 மீ, ஏர் பிஸ்டல் பிரிவில் 239.6 புள்ளிகளை குவித்து தங்கம் வென்றார் சரப்ஜோத் சிங். மகளிர் பிரிவில் ஈஷா சிங் தங்கம் வென்றிருந்தார். இதில் சீனா வெள்ளி, வெண்கலம் வென்றது. 6-ஆவது நாள் முடிவில் தலா 9 தங்கம்,வெள்ளி 4 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா.
20 பதக்கங்களுடன் சீனா 2-ஆவது இடம் வகிக்கிறது.