டிஎன்பிஎல்: திண்டுக்கல் அபார வெற்றி

மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.
அரைசதம் அடித்த ஜெகதீசன், ஹரி நிஷாந்த்.
அரைசதம் அடித்த ஜெகதீசன், ஹரி நிஷாந்த்.


மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.
முதலில் ஆடிய திண்டுக்கல் 182/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மதுரை அணி 152/9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 
திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் தரப்பில் ஹரி நிஷாந்த்-என்.ஜெகதீசன் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 104 ரன்கள் சேர்த்த நிலையில் ஹரி நிஷாந்த் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 57 ரன்களை விளாசி அவுட்டானார்.
அவருக்கு பின் வந்த கேப்டன் அஸ்வின் 16, விவேக் 2, சதுர்வேதி 1, சுமந்த் ஜெயின் 0, முகமது 13 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். மறுமுனையில் அற்புதமாக ஆடிய ஜெகதீசன் 1 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 87 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை விளாசியது திண்டுக்கல்.
மதுரை தரப்பில் ரஹில் ஷா 3-21, கிரண் ஆகாஷ் 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது. அருண் கார்த்திக் 24, சரத் ராஜ் 26, அபிஷேக் தன்வர் 24, மிதுன் 20 ஆகியோர் மட்டுமே ஒரளவு ஆடி ரன்களை சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
திண்டுக்கல் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிலம்பரசன் 4-20, அஸ்வின் 3-16 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஜெகதீசன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com