மே.இ.தீவுகள் ஏ அணியை 4-1 என வீழ்த்தியது இந்தியா

மே,இ.தீவுகள் ஏ அணியை 4-1 என்ற கணக்கில் வென்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய ஏ அணி.
மே.இ.தீவுகள் ஏ அணியை 4-1 என வீழ்த்தியது இந்தியா

மே,இ.தீவுகள் ஏ அணியை 4-1 என்ற கணக்கில் வென்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய ஏ அணி.
இரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே 3-0 என தொடரை கைப்பற்றியிருந்த இந்திய அணி, நான்காவது ஆட்டத்தில் மே.இ.தீவுகளிடம் தோல்வியுற்றது. இதன் கடைசி ஆட்டம் கூலிட்ஜி கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய மே.இ. தீவுகள் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுனில் அம்ப்ரீஸ் 61, ஷெர்பேன் ரூதர்போர்ட் 65 ரன்களை விளாசினர். இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர் 2-39, நவ்தீப் சைனி 2-31, ராகுல் சாஹர் 2-53 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய இந்திய ஏ அணி 33 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 
ருத்ராஜ் கெய்க்வாட் 99, ஷுப்மன்கில் 69, ஷிரேயஸ் ஐயர் 61 ரன்களை விளாசினர். மே.இ.தீவுகள் தரப்பில் கீமோ பால், ரஹீம் கார்ன்வால் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர்.
இதன் மூலம் 4-1 என தொடரை கைப்பற்றியது இந்தியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com