பாகிஸ்தானில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்கச் செல்லும் இந்திய அணியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என கேப்டன் மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி தந்தாலும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கவுள்ள 2-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தை வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய ஏ அணி. மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ளனர்.
புதுதில்லியில் நடைபெற்று வரும் சர்தார் சஜ்ஜன் சிங் நினைவு தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் அன்ஜும் மொட்கில்-அர்ஜுன் பாபுடா இணை தங்கம் வென்றது.
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் பெடரேஷன் அமைப்பின் அலட்சியமான செயல்பாட்டால், வரும் டிசம்பர் 15-121 தேதிகளில் வாஷிங்டனில் நடக்கவுள்ள உலக சாம்பியன் போட்டியில் இந்திய அணிகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு உரிய நேரத்தில் சாய் அமைப்பிடம் இருந்து தேவையான ஒப்புதலை எஸ்ஆர்எப்ஐ அமைப்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.