பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், டெல் பொட்ரோ, மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பாரிஸில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான இதில் வியாழக்கிழமை இரவு 2-ஆவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
ஆடவர் பிரிவில் ஆர்ஜென்டீனா வீரர் டெல் பொட்ரோ 5-7, 6-4, 6-2, 6-7, 6-2 என 5 செட் கணக்கில் போராடி ஜப்பான் வீரர் யோஷிட்டோவை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சுவிஸ் வீரர் ஹென்றி லாக்úஸானெனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹலேப் 6-4. 5-7, 6-3 என்ற செட் கணக்கில் மகதா லினேட்டை போராடி வென்று 3-ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் குருமி நராவை வென்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 3-6, 3-6 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் பெட்ராவிடம் தோல்வியுற்றார். இதனால் ஒஸாகா தனது முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார் எனத்தெரிகிறது.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் டிவிஜ் சரண்-மார்செலோ டெமோலைனர் (பிரேசில்) இணை 3-6, 4-6 என ஹென்றி-ஜான் இணையிடம் வீழ்ந்தது.