2003, 2007-இல்ஆஸி. அணியைபோல் தற்போது இந்தியா ஆதிக்கம் செலுத்தும்:  அஸ்வின்

2003, 2007-இல் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தும் என மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
2003, 2007-இல்ஆஸி. அணியைபோல் தற்போது இந்தியா ஆதிக்கம் செலுத்தும்:  அஸ்வின்


2003, 2007-இல் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தும் என மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அஸ்வின் பவுண்டேஷன் அமைப்பை அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து உதவி செய்ய அஸ்வின் திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
சஹல், குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக தான் செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய போட்டியில் சஹல் சிறப்பாக வீசி வருகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றிகளை நாம் பெற்றுள்ளோம். ஆப் ஸ்பின்னர்களுக்கு தற்போது வாய்ப்பில்லையே என கேட்டபோது, அவர் கூறுகையில், இந்த நிலை விரைவில் மாறும். வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால், இடதுகை ஸ்பின்னர்களும் ஏராளம் தேவைப்படுகின்றனர். குறுகிய ஓவர் ஆட்டங்களில் ஆப் ஸ்பின்னர்கள் தேவை குறைந்துள்ளது. அதே நேரம் ஐபிஎல் போட்டியில் நானும், ஹர்பஜனும் சிறப்பாக செயல்பட்டோம். கவுண்டி அணியான நாட்டிங்ஹாம்ஷயர் அணியில் ஆடுவதற்காக வரும் 23-ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறேன். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பொருளாதார வசதியில்லாத குழந்தைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதி, நிதிவசதி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட 8 இளம் வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், ஊக்கத்தொகையை அஸ்வின் மனைவி ப்ரீத்தி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com