பாக். வீரர்கள் தயாராக வேண்டும்: சர்பராஸ் அகமது

2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு பாக் வீரர்கள் தயாராக வேண்டும் என அதன் கேப்டன் சர்பராஸ் அகமது கூறியுள்ளார்.
பாக். வீரர்கள் தயாராக வேண்டும்: சர்பராஸ் அகமது


2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு பாக் வீரர்கள் தயாராக வேண்டும் என அதன் கேப்டன் சர்பராஸ் அகமது கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதற்கிடையே இந்தியாவுடன் 16-ஆம்  தேதி ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் டிராஃப்போர்டில் பாகிஸ்தான் ஆடுகிறது. 
கடந்த 1992-இல் இருந்து நடைபெற்ற 6 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒருமுறை கூட இந்தியாவை வென்றதில்லை பாகிஸ்தான். 
கேப்டன் சர்பராஸ் கூறியதாவது: பெரிய அணிகளான ஆஸி., இந்தியாவை வெல்ல வேண்டும் என்றால் பீல்டிங், பவுலிங்கை மேம்படுத்த வேண்டும். பீல்டிங் மிக மோசமாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் 3 கேட்சுகளை தவற விட்டும், பீல்டிங்கில் கோட்டை விட்டதாலும் தோல்வியைத் தழுவினோம். ஆஸி.யை விட அதிக தவறுகள் செய்தோம். முதல் 30 ஓவர்களில் ஒழுங்காக பந்துவீசவில்லை. 15 பந்துகளில் 3 விக்கெட்டை இழந்தது திருப்புமுனையாகி விட்டது. இந்தியா வலிமையான அணி ஆனதால் அதற்கான உத்தியை வகுக்க வேண்டும் என்றார் சர்பராஸ்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com