எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா-பிஜி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தினர். குர்ஜித் 4 கோல்களையும், மோனிகா 2 கோல்களையும், லால்ரேமிசியாமி, ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, லில்லிமா மின்ஸ், நவ்நித் கெளர் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இறுதியில் 11-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.
கேப்டன் ராணி கூறியதாவது:
எதிரணி எதுவாக இருந்தாலும், நாங்கள் எங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தி ஆடினோம். சனிக்கிழமை அரையிறுதியில் வலிமையான அணியை எதிர்கொள்ள நேரிடும். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் ராணி.