மே.இ.தீவுகள் அணி வீரர்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்:  யுஜவேந்திர சஹல்

ஐபிஎல் போட்டியை போல் இல்லாமல் உலகக் கோப்பையில் மே.இ.தீவு வீரர்கள் அழுத்தத்தை எதிர்கொள்வர் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல் கூறியுள்ளார்.
மே.இ.தீவுகள் அணி வீரர்கள் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்:  யுஜவேந்திர சஹல்


ஐபிஎல் போட்டியை போல் இல்லாமல் உலகக் கோப்பையில் மே.இ.தீவு வீரர்கள் அழுத்தத்தை எதிர்கொள்வர் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல் கூறியுள்ளார்.
அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறும் நிலையில் உள்ள மே.இ.தீவுகளும், கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவும், வரும் 27-ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன. சஹல் இதுவரை 4 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதுதொடர்பாக சஹல் திங்கள்கிழமை கூறியதாவது: ஐபிஎல் போட்டிகளில் மே.இ.தீவு வீரர்கள் த்ரில்லான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். ஆனால் உலகக் கோப்பையில் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். ரஸ்ஸல் அதிரடியாக ஆடுபவர் என்றாலும், அவரைக் கட்டுப்படுத்த உத்தியை வைத்துள்ளோம். தொடை காயத்தால் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரஸ்ஸல் ஆடவில்லை. நான்கு விக்கெட்டுகள் போன பின்  ரஸ்ஸல் களமிறங்கினால், அவரது ஆட்டத்தை கட்டுப்படுத்துவோம். குறைவான ஸ்கோர்களையும் நாம் சிறப்பாக வீசி தற்காத்துக் கொள்ளலாம்.
ஆப்கன் அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசி நம்மை கட்டுப்படுத்தி விட்டனர். இதனால் 30 ரன்கள் குறைவாக எடுக்க நேர்ந்தது. மிடில் ஓவர்களின் போது குல்தீப்பும், நானும் எவ்வளவு அதிகம் நேர்த்தியாக பந்துகளை வீச வேண்டும் என்பதை முடிவு செய்து வீசினோம் என்றார் சஹல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com