ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலியின் 116, குல்தீப் யாதவ் 3 விக்கெட் போன்றவை அணியின் வெற்றிக்கு வித்திட்டன. முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி. 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில் மூன்றாவது டி20 ஆட்டம் ராஞ்சியில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ராஞ்சி மைதானத்தில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார்கள். அப்போது, இந்திய வீரர்களிடையே யார் அதிக தூரம் சிக்ஸர் அடிப்பது என்கிற ஒரு வேடிக்கையான போட்டி உருவானது. இதையடுத்து தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் அதிகத் தூரத்துக்கு சிக்ஸர் அடித்து தன் பலத்தை நிரூபித்தார்கள். இதன் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.