தோனிக்கு ஓய்வு: கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்!

கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிஷப் பந்த்...
தோனிக்கு ஓய்வு: கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸி., 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் கோலியின் சதமும் வீணானது. 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 4ஆவது ஒரு நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹலியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரிஷப் பந்த் கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். பேட்டிங்கிலும் அவர் திறமையை நிரூபித்தால் உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com