ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதலிரண்டு ஆட்டங்களை வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்களை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் தில்லியில் இன்று தொடங்கியுள்ள 5-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆஸி. அணியில் ஸ்டாய்னிஸ், நாதன் லயன் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் சாஹலுக்குப் பதிலாக ஜடேஜாவும் ராகுலுக்குப் பதிலாக ஷமியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதனால் 4-ம் நிலை வீரராக விஜய் சங்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.