கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு: கோலி உள்ளிட்டோர் இரங்கல்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
 கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு: கோலி உள்ளிட்டோர் இரங்கல்


நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. கோழைத்தனமான இந்த செயலில் வங்கதேச அணியினர் தப்பியது நிம்மதியை தருகிறது என்றார்.
நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் கூறியது: உலகின் ஒரு மூலையில் உள்ள எங்கள் நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் இந்த சம்பவம் பயங்கரமாக உள்ளது. இதை சொல்ல வார்த்தைகள் இல்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உலகின் எந்த பகுதியும் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இதே போல் ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க், டேவ் வாட்மோர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com