தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ஆடுவது கேள்விக்குறியாகிவுள்ளது.
இலங்கைக்கு எதிராக நியூலேண்ட்ஸில் நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தின் போது லுங்கி நிகிடி காயமடைந்தார். பந்துவீசும் போது சிரமமாக உள்ளது என்பதை உணர்ந்து நிறுத்தினார். இதுதொடர்பாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் தசைநார் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் 4 வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே சார்பில் பங்கேற்று ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.