ஐசிசி உலகக் கோப்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர் பட்டாளம் இங்கிலாந்தில் திரள முடிவு

பாரத் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அடங்கிய அமைப்பு, உலகக் கோப்பை போட்டியை
ஐசிசி உலகக் கோப்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர் பட்டாளம் இங்கிலாந்தில் திரள முடிவு


பாரத் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அடங்கிய அமைப்பு, உலகக் கோப்பை போட்டியை கண்டு ரசிப்பதற்காகவும், இந்திய அணிக்கு ஆதரவளிப்பதற்காகவும் இங்கிலாந்தில் திரள முடிவு செய்துள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை 4 இந்திய ரசிகர்கள் பாரத் ஆர்மி என்ற பெயரில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து ரசித்தனர்.
அப்போது முதல் இந்திய அணி விளையாடும் ஒவ்வோர் ஆட்டத்திலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி எந்த நாட்டில் விளையாடினாலும் அந்த மைதானத்தில் சுமார் 5,000 முதல் 6,000 பேர் கொண்ட பாரத் ஆர்மி அமைப்பு குவிந்துவிடும்.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பாரத் ஆர்மியில் அங்கம் வகிக்கும் 22 நாடுகளிலிருந்து சுமார் 8,000 இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டத்தை கண்டு ரசிக்க முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ராகேஷ் படேல் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com