சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை 26-ஆம் தேதி தொடங்குகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தின் டிக்கெட் விற்பனை 26-ஆம் தேதி தொடங்குகிறது.
இரு அணிகள் இடையிலான ஆட்டம் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை தொடர்பாக சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரண்டாவது உள்ளூர் ஆட்டம் வரும் 31-இல் நடைபெறுகிறது. டிக்கெட் விற்பனை 26-ஆம் தேதி காலை 8.45 மணி முதல் தொடங்கும். மேலும்  in.bookmyshow.com, www.chennaisuperkings.com என்ற இணையதளங்கள் மூலமும் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம். ஆன்லைன் டிக்கெட் விற்பனை காலை 8.45 மணிக்கு தொடங்கி, டிக்கெட்டுகள் விற்று தீரும் வரை நடைபெறும்.
மைதானத்தில் இதற்காக சிறப்பு கவுன்ட்டர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.45 மணிக்கு தொடங்கும் விற்பனை மாலை 6 மணிக்கு நிறைவடையும். 
(12.30 முதல் 2.00 மணிவரை உணவு இடைவேளை).
சி, டி மற்றும் இ: கீழ்தளம் ரூ.1300 (கவுன்ட்டர்களில் மட்டுமே விற்பனை), பூத் எண். 6, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு) .
சி மற்றும் இ மேல் தளம்: ரூ.2500. (கவுன்ட்டர்களில் மட்டுமே விற்பனை). பூத் எண்.3, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு).
சி, டி லெவல் 3 பாக்ஸ், ரூ.5000, ஹெச்: லெவல் 2 பாக்ஸ், ரூ.6500, பெவிலியன் மாடி, ரூ.6500, (டிஎன்சிஏ பாக்ஸ் ஆபீஸ்), எம்ஜே.கோபாலன் கேட், விக்டோரியா ஹாஸ்டல் ரோடு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com