டி20: இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான இறுதி டி20 ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா ஒயிட்வாஷ் செய்தது.
கோப்பையுடன் தென்னாப்பிரிக்க வீரர்கள்.
கோப்பையுடன் தென்னாப்பிரிக்க வீரர்கள்.


இலங்கைக்கு எதிரான இறுதி டி20 ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா ஒயிட்வாஷ் செய்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 198 ரன்களை குவித்தது. ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 66, பிரிட்டோரியஸ் 77, பால் டுமினி 34 ரன்களை சேர்த்தனர். பிரிட்டோரியஸ் 3 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 77 ரன்களை சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார்.
 இலங்கை தரப்பில் சுரங்க லக்மல், வான்டர்சே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர் .
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 42 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் ஆடியது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை எடுத்து தடுமாறியது.
அப்போது மழை திடீரென குறுக்கிட்டதால், டிஎல்எஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. இதனால் வெற்றி இலக்கு 17 ஓவர்களில் 183 ஆக குறைக்கப்பட்டது. நிரோஷ் டிக்வெலா 38, இசுரு உடானா 36 ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
15.4 ஓவர்களிலேயே 137 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டானது . தென்னாப்பிரிக்க தரப்பில் ஆன்டில் பெலுக்கவேயோ அற்புதமாக பந்துவீசி 4-24 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 3-0 என தொடரையும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com