மூட்டுவலி காயத்தில் இருந்து குணம் பெற்று மீண்டும் ஆடத் திரும்பியுள்ள செரீனா வில்லியம்ஸ் தனது முதல் வெற்றியை பெற்றார்.
ரோம் நகரில் நடைபெறும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக முதல் சுற்றில் ஸ்விடனின் ரெபக்காவை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ரார் செரீனா.கடந்த மார்ச் மாதம் மியாமி ஓபன் போட்டியில் மூட்டில் காயம் ஏற்பட்டதால் விலகிய அவர் தற்போது மீண்டும் களமிறங்கி உள்ளார்.
சகோதரி வீனஸுடன் மோதல்:
மற்றொரு ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 7-6, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் எல்ஸி மெர்டென்ஸை வீழ்த்தினார். ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து களிமண் தரை மைதானத்தில் வில்லியம்ஸ் சகோதரிகள் இரண்டாம் சுற்றில் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த மாதம் நடக்கவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியில் தனது 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.