சாம்பியனுக்கு ரூ.28 கோடி ரொக்கப் பரிசு

வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ள 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும்,  இரண்டாவது
சாம்பியனுக்கு ரூ.28 கோடி ரொக்கப் பரிசு


லண்டன்: வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ள 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும்,  இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும் ரொக்கப்பரிசாக தரப்படுகிறது,

இந்த உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, உள்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஜூலை 14-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடக்கிறது. 

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசளிக்கப்படுகிறது.  2-ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும், அரையிறுதியில் தோல்வியுறும் 2 அணிகளுக்கும் தலா ரூ.5.61 கோடி வழங்கப்படுகிறது. 

லீக் பிரிவில் (45 ஆட்டங்களில்) வெல்லும் அணிகளுக்கு தலா ரூ.28 லட்சம் தரப்படும். லீக் பிரிவை கடக்கும் அணிகளுக்கு தலா ரூ.70 லட்சமும் தரப்படுகிறது.
பரிசுத் தொகையாக மட்டும் மொத்தம் ரூ.70.16 கோடி செலவிடப்படுகிறது என ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com