ரொனால்டோவுக்கு சீரி ஏ லீக் சிறந்த வீரர் விருது

ஜூவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் போட்டி சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜூவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் போட்டி சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ ஏற்கெனவே இங்கிலாந்து, ஸ்பெயின், உள்ளிட்ட நாடுகளின் லீக் போட்டிகளிலும் சிறந்த வீரர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் அவர் 5 முறை தங்கக் கால்பந்து விருதுகளையும் வென்றுள்ளார். 34 வயதான ரொனால்டோ கடந்த 2018-இல் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி ஜுவென்டஸ் அணியில் சேர்ந்தார். இந்த சீசனில் மொத்தம் 21 கோல்களை அந்த அணிக்காக அடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com