இந்தியா ஓபன் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேரி கோம், சிவா தாபா, அமித் பாங்கல்

இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில், சக நாட்டு வீராங்கனை நிகத் ஜரீனை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம்.
வெற்றி மகிழ்ச்சியில் மேரி கோம்.
வெற்றி மகிழ்ச்சியில் மேரி கோம்.

இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில், சக நாட்டு வீராங்கனை நிகத் ஜரீனை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம்.

வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டத்தில், மிúஸாரம் வீராங்கனை வன்லால் துவாட்டியை எதிர்கொள்கிறார் மேரி கோம்.

ஆடவர் பிரிவில்,  இந்திய வீரர்கள் சிவா தாபா (60 கிலோ), அமித் பாங்கல் (52 கிலோ), சச்சின் சிவாச் (52 கிலோ), சதீஷ் குமார் (+91 கிலோ) உள்பட 17 இந்தியர்கள் 10 எடைப்பிரிவுகளில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

சிவா தாபா, மணீஷ் கௌசிக்கை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com