துளிகள்...

ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை (டிஆர்எஸ்) செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மும்பை அணியின் மூத்த வீரர்கள் ஆதித்ய தாரே, சூரிய குமார் யாதவ் ஆகியோர் வலியுறுத்தினர்.

ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை (டிஆர்எஸ்) செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மும்பை அணியின் மூத்த வீரர்கள் ஆதித்ய தாரே, சூரிய குமார் யாதவ் ஆகியோர் வலியுறுத்தினர்.

உலகக் கோப்பையில் ஜூன் 16ஆம் தேதி இந்திய அணியுடன் மோதிய பிறகு, குடும்பத்தினரை பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடன் தங்க வைத்துக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ஆஸி. அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர், உலகக் கோப்பையில் 3 கேப்டன்கள் கவனம் ஈர்ப்பவர்கள் என்று கூறி பட்டியல் வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இயான் மோர்கன் (இங்கிலாந்து), ஆரோன் பின்ச் (ஆஸி.) ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து அரையிறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு பேங்க் ஆஃப் பரோடா வங்கி அணி 62-58 என்ற புள்ளிக்கணக்கில் புதுதில்லி இந்தியன் ஆர்மி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com