சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சீனா சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை இதுவரை வீழ்த்தாக பாகிஸ்தான் இந்த முறை வரலாற்றை திருத்தி எழுதும் என்று அந்நாட்டு தேர்வுக் குழுத் தலைவரும், முன்னாள் வீரருமான இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டமும், தென்னாப்பிரிக்கா-மே.இ.தீவுகள் இடையேயான பயிற்சி ஆட்டமும் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டது.
கரூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடை பந்தாட்டப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில், 88-79 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியன் வங்கி சென்னை அணி, பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணியை வென்று முதல் பரிசை தட்டிச் சென்றது.