தொழிற்முறை ஸ்குவாஷ் கூட்டமைப்பு (பிஎஸ்ஏ) சேலஞ்சர் டூர் போட்டியான செகிசுயி ஓபனில் இந்திய வீரர் மகேஷ் மங்காவன்கர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிட்சர்லாந்தின் கிரையன்ஸ் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த மகேஷ், 3ஆவது இடம் வகித்த ஸ்பெயின் வீரர் பெர்னட் ஜாமேவை 11-9, 3-11, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மொத்தம் 48 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
3 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறையாக செகிசுயி ஓபனில் பட்டம் வென்றார் மகேஷ். தற்போது, இரண்டாவது முறையாக சாம்பியனாகியுள்ளார்.