100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் களமிறங்கிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா அடைந்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான2-வது டி20 ஆட்டம் ராஜ்காட்டில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, வங்கதேசம் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் களமிறங்கியதன்மூலம் 100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் களமிறங்கியுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
இதேபோல் 100-வது சர்வதேச டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கர் பெற்றுள்ளார். 100-வது சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றுள்ளார். இந்த ஜாம்பவான்கள் வரிசையில் தற்போது ரோஹித் சர்மாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.