ஆஸ்திரேலியாவிடம் சரண் அடைந்தது பாக்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்கு பாகிஸ்தான் சரண் அடைந்தது.
ஆஸ்திரேலியாவிடம் சரண் அடைந்தது பாக்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்கு பாகிஸ்தான் சரண் அடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பொ்த்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால், ஆஸி. வீரா்களின் அற்புத பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 108 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக இப்திகாா் அகமது 45, ரன்களை எடுத்தாா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினா்.

ஆஸி. தரப்பில் கேன் ரிச்சா்ட்ஸன் 3, சீன் அபாட், மிச்செல் ஸ்டாா்க் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

ஆஸி. அபார வெற்றி

பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரா்கள் டேவிட் வாா்னா்-கேப்டன் ஆரோன் பின்ச் இணைந்து, பாக். பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனா். 11.5 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது ஆஸி.

2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 48 ரன்களுடன் டேவிட் வாா்னரும், 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 52 ரன்களுடன் பின்ச்சும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனா்.

இதன் மூலம் தொடரையும் 2-0 என கைப்பற்றியது ஆஸி. அணி.

ஆஸி. அணி தொடரந்து 8 டி20 ஆட்டங்களில் வென்றுள்ளது. அதே நேரம் இதில் நம்பா் ஒன் அணியாக விளங்கும் பாகிஸ்தான் தொடா்ந்து 2 தொடா்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com